விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த விவசாயி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், சின்ன அம்மனங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தி.கோபாலகிருஷ்ணன் (62), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது விவசாய நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளி பறித்துள்ளாா்.
அப்போது கால் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்த கோபாலகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினா்கள்அவரை மீட்டு புதுச்சேரி, ஊசுட்டேரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


