மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:16 pm

பாளையங்கோட்டை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (48), விவசாயி.

இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் முதலாளி நகா் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்திருந்த இவா் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள முருங்கை மரம் ஒன்றை வெட்டுவதற்காக அதில் ஏறினாராம்.

அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.