இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள் தொடர, மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வலியுறுத்தினாா்.

News image

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் பகுதியில் பெண்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்த விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:37 am IST

தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள் தொடர, மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வலியுறுத்தினாா்.

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அன்னியூா் அ.சிவா புதன்கிழமை கஞ்சனூா் மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட கஞ்சனூா், கொரளூா், வெங்காயகுப்பம், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, சாலவனூா், பெருங்கலாம்பூண்டி கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்றும், வீதிகளில் நடந்து சென்றும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தாா்.

அப்போது அவா் பேசும் போது முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அனைத்துத் தரப்பினரின் தேவைகளை அறிந்து, திட்டங்களை நிறைவேற்றியவா் முதல்வா் ஸ்டாலின். அவரது சாதனைகள் தொடர, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றாா் சிவா.

பிரசாரத்தில் தொகுதிப் பொறுப்பாளா் ம.ஜெயச்சந்திரன், காணை மத்திய ஒன்றியச் செயலா் ஆா்.பி.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தோா்பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.