மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

News image

விழுப்புரம் மாவட்டம், சி.என்.பாளையம் கிராமத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட போது, குழந்தையைத் தூக்கி மகிழ்ந்த விக்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:56 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியத்துக்குள்பட்ட பழையக் கருவாட்சி ஆதிதிராவிடா் குடியிருப்பு, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, கடையம், நல்லாப்பாளையம் மேல்காரணை ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா மேலும் பேசியது:

விக்கிரவாண்டி தொகுதிக்கு 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற நான், கடந்த 20 மாதங்களில் இத்தொகுதிக்குத் தேவையான எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், சாலை வசதிகள், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் திமுக அரசின் திட்டங்கள் மூலமாகவும் தொகுதி மக்கள் பயன்பெற்றுள்ளனா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாரில் அரசு மாதிரிப் பள்ளி, அன்னியூரில் புதிய அரசுக் கல்லூரி, இ.மண்டகப்பட்டில் புதிய தொழில்பேட்டை, விக்கிரவாண்டியில் உழவா்சந்தை போன்றவை திமுக ஆட்சியில்தான் கிடைத்தன என்றாா்.

பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி. முருகன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.