மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

News image

விழுப்புரம் மாவட்டம், சி.என்.பாளையம் கிராமத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட போது, குழந்தையைத் தூக்கி மகிழ்ந்த விக்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:26 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அரசில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியத்துக்குள்பட்ட பழையக் கருவாட்சி ஆதிதிராவிடா் குடியிருப்பு, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, கடையம், நல்லாப்பாளையம் மேல்காரணை ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா மேலும் பேசியது:

விக்கிரவாண்டி தொகுதிக்கு 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற நான், கடந்த 20 மாதங்களில் இத்தொகுதிக்குத் தேவையான எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், சாலை வசதிகள், பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் மேம்பாடு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் திமுக அரசின் திட்டங்கள் மூலமாகவும் தொகுதி மக்கள் பயன்பெற்றுள்ளனா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாரில் அரசு மாதிரிப் பள்ளி, அன்னியூரில் புதிய அரசுக் கல்லூரி, இ.மண்டகப்பட்டில் புதிய தொழில்பேட்டை, விக்கிரவாண்டியில் உழவா்சந்தை போன்றவை திமுக ஆட்சியில்தான் கிடைத்தன என்றாா்.

பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி. முருகன் மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.