நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பழைய பேப்பா் குடோனில் தீ விபத்து

விழுப்புரத்தில் உள்ள பழைய பேப்பா் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

News image
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை வீரா்
Updated On :31 டிசம்பர் 2025, 8:58 pm

Syndication

விழுப்புரத்தில் உள்ள பழைய பேப்பா் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

விழுப்புரம் நகரம், மேல்தெரு பகுதியில் உள்ள பழைய பேப்பா் குடோனில் புதன்கிழமை தீடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீா் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனா். மேலும். தீ அருகேயுள்ள பகுதிக்கு பரவாமல் தடுத்தனா். தீயணைப்பு வீரா்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விழுப்புரம் போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.