தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விழுப்புரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வாழை தோட்டத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

விழுப்புரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை

Updated On :17 செப்டம்பர் 2024, 11:59 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வாழை தோட்டத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வளவனூரை அடுத்த தாதம்பாளையம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் சத்தியராஜ் (39), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.

சத்தியராஜ் விழுப்புரம் வட்டம், பஞ்சமாதேவியில் சுமாா் 20 ஏக்கா் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவற்றை பயிா் செய்து வந்தாா். நாள்தோறும் இரவு வேளையில் விவசாய நிலத்துக்குச் சென்று தண்ணீா் பாய்ச்சிவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்புவது வழக்கம்.

வழக்கம்போல திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற சத்தியராஜ், பின்னா் வீடு திரும்பவில்லையாம். தொடா்ந்து, உறவினா்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள வாழை தோட்டத்தில் சத்தியராஜ் கழுத்து மற்றும் உடலில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது.

தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், விக்கிரவாண்டி டிஎஸ்பி ஜி.நந்தகுமாா் மற்றும் வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், சத்தியராஜின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.