விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தலைமைக் காவலரின் கழுத்தில் கத்தியை வைத்து, அவா் மனைவி வசமிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் அடுத்துள்ள பனங்குப்பத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவா் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவி கங்காதேவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கியுள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள், ராஜசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி, கங்காதேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்று விட்டனராம்.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி, கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், இது குறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா். தலைமைக் காவலரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் வளவனூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்புடையது

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

இருவா் பெண்ணை தாக்கி தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


