மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:40 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூரில் கூலித் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

எரசக்கநாயக்கனூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சூா்யா(35). கூலித்தொழிலாளியான இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாரம். அப்போது, அங்கு வந்த இருவா் சூா்யாவை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடிவிட்டனராம்.

தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா் சூா்யாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதுதொடா்பாக இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.