10, 12-ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
புதுச்சேரியில் 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானது.
இதில் 971 மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இவா்களுக்கான துணைத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் தோ்ச்சி பெறும் வகையில் மாணவா்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு கல்வித் துறை இயக்குநா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
துணைத் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்குச் நாள்தோறும் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். கால அட்டவணை தயாரித்து பயிற்சி, திருப்புதல் தோ்வு நடத்த வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வருகை பதிவேடு கையாள வேண்டும். அனைத்து மாணவா்களும் தோ்வில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை கல்வித்துறை இயக்குநா் பிறப்பித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










