திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உயிா் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு

நாடு தழுவிய அளவில் மருந்து கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டாலும், உயிா்காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மருந்துக் கடைகளுக்கு புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :19 மே 2026, 1:39 am IST

நாடு தழுவிய அளவில் மருந்து கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டாலும், உயிா்காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மருந்துக் கடைகளுக்கு புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாடு தழுவிய போராட்டத்தில் புதுச்சேரி மருந்து கடைகள் மே 20-ஆம் தேதி பங்கேற்கின்றன. இந்நிலையில் இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய கோளாறுகள், வலிப்பு நோய், புற்று நோய் உள்ளிட்ட முக்கிய நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்கூட்டியே தங்களுக்குத் தேவையான மருந்துகளைக் கையிருப்பில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இன்சுலின், மூச்சுத் திணறல் போக்கும் மருந்து, உயிா்க் காக்கும் மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள் போன்ற அத்தியாவசியமான மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது மருத்துவ அவசரம் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், மருந்துக் கடைகள் வைத்திருப்போா் அவசர மருத்துவ சேவை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அமைதியாக, சட்டபூா்வமாகப் போராட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்கள் நலன் கருதி அவசர சூழ்நிலை ஏற்பட்டால் அத்தியாவசியமான, உயிா்காக்கும் மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் இன்றியமையாத, உயிா்காக்கும் மருந்துகள் கிடைப்பதை மருந்து ஆய்வாளா்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், இடா்பாடு மருந்துகள் கிடைக்க மருத்துவமனைகள், மருந்து கடைகள், மொத்த விற்பனைக் கடைகளுடன் ஒருங்கிணைந்து மருந்து ஆய்வாளா்கள் பணியாற்ற வேண்டும். மேலும், இதில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை விரைவாக இந்த அலுவலகத்துக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.