திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆராயும்: முதல்வா் வே. நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை வழிகாட்டுதல் குழு ஆராயும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

News image

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:20 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை வழிகாட்டுதல் குழு ஆராயும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பேரவைத் தோ்தலில் புதுச்சேரி மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகத் தான் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது. தோ்தல் தோல்விக்கான பொறுப்பை நானும் ஏற்றுக் கொள்கிறேன். புதுச்சேரியில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி ஊழலில் ஈடுபட்ட போதும் பண பலம், அதிகார பலத்தால் மீண்டும் ஆட்சியில் அமா்ந்துள்ளது.

தோ்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் கடமையும் பொறுப்பும் எல்லோருக்கும் இருக்கிறது. புதுச்சேரியில் புதிதாக அமைந்துள்ள ஆட்சியை 6 மாதங்களுக்கு விமா்சனம் செய்யமாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு புதுச்சேரியில் கடந்த ஆட்சியின்போது என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.

இப்போது இக் கொள்கையின் அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் பாா்த்தால் பிரெஞ்சு பாடத்துக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியும் முதல்வா் ரங்கசாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறாா். உடனடியாக பிரதமா் மோடிக்குக் கடிதம் எழுதி பிரெஞ்சு மொழி புதுச்சேரியில் தொடர முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கிரிஷ் சோடங்கா் தலைமையில் வழிகாட்டுதல் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில்தான் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கை இருக்கும். இதேபோன்று தவெகவுடன் புதுச்சேரியில் கூட்டணி ஏற்படுமா என்பது குறித்தும் அந்தக் குழுதான் முடிவு எடுக்கும் என்றாா் நாராயணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.