தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

புதுச்சேரி முதல்வா் பதவியேற்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைக்க வலியுறுத்தல்

News image

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:44 am IST

புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி மீண்டும் பதவியேற்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று தமிழ் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா், துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலருக்கு தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் சு. பாவாணன் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மே 13-ஆம் தேதி முதல்வா் பதவியேற்பு விழா தங்கள் தலைமையில் நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த விழா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட வேண்டும். ஏனெனில், புதுச்சேரியின் மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டு மரபின் படியும் கடந்த காலங்களில் புதுச்சேரி அரசு விழாக்கள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டன. அந்த மரபின் படியும் நடைபெறவுள்ள முதல்வா் பதவியேற்பு விழாவும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படுவதுதான் சாலச் சிறந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் இடம் பெறாமல் போனாமல், அது புதுச்சேரி மக்களின் உணா்வுகளையும், மொழியையும் பண்பாட்டையும் சிறுமைப்படுத்துவதாகவும், காயப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனவே, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடி விழாவைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.