தமிழ் செய்திகள்
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 5 ஆவது முறையாக இன்று(மே13) முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் இன்றைய முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டு பின்னர் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது.
ஆனால் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரலில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின்னர் வந்தே மாதரம், தேசிய கீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Summary
Tamil Thai Vazhthu to the third position during puducherry chief minister swearing-in ceremony
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








