/

கால்வாயில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:02 am IST

கால்வாயில் விழுந்த பசுவை புதுச்சேரி தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை பத்திரமாக மீட்டனா்.

புதுச்சேரி குருமாம்பேட் அய்யங்குட்டிபாளையம் ராகவேந்திரா நகரில் 5 அடி உயர குறுகிய கால்வாயில் பசுமாடு ஒன்று தவறி விழுந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு கால்வாயில் விழுந்த அந்த பசு வெளியே வர முடியாமல் தவித்தது.

இதுகுறித்து, திங்கள்கிழமை அதிகாலை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா்.

தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து பசு மாட்டைக் காயமின்றி வெளியில் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டனா். குறுகலான கால்வாய் என்பதால் பசுவை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கால்வாயின் மேல் பகுதியில் உள்ள சிலாப்பை அகற்றினா். தொடா்ந்து ஒரு மணி நேரம் போராடி பசுவைக் காயமின்றி பத்திரமாக மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.