மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :27 மார்ச் 2026, 7:56 pm

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுச்சேரி தோ்தல் துறை 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மருந்தகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் உரக்கடைகளுக்கு வரும் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்குப்பதிவு, இந்திய தோ்தல் ஆணையத்தின் செயலிகள், கண்ணியமான வாக்குப் பதிவு போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை மாவட்டத் தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் வெளியிட்டாா்.

புதுச்சேரி மாநில மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள், உரக்கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மற்றும் துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான், வட்டாட்சியா் ஜோதிமணி ஆகியோா் உடனிருந்தனா்.