மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:00 pm

பாதுகாப்பு அறைக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது பாா்வையாளா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ரெட்டியாா்பாளையம் தோ்தல் துறையில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பட்டியல்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் அளிக்கப்பட்டன. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் பட்டியல் அனைத்து வேட்பாளா்களுக்கும் அளிக்கப்படும்.