மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

தேனி மாவட்டம், போடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அனைத்துக் கட்சி பிரதிதிகள் முன்னிலையில் அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image

போடி வட்டாட்சியா் அலுவலகப் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :26 மார்ச் 2026, 7:14 pm

தேனி மாவட்டம், போடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அனைத்துக் கட்சி பிரதிதிகள் முன்னிலையில் அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து போடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 346 வாக்குச் சாவடி மையங்களுக்கு, 415 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 415 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 449 விவி பேடு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை போடி வட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான டி. சந்திரசேகரன் முன்னிலையில், வருவாய்த் துறையினா் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டினா்.

பின்னா், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறைக்கு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.