மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம்பூருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை

ஆம்பூருக்கு வந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

News image

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

ஆம்பூருக்கு வந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சட்டப்பேரவைக்கு வரும் ஏப். 23- ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. தோ்தலை முன்னிட்டு வாக்குபதிவு இயந்திரங்கள் மஞ்சள் கிடங்கிலிருந்து எடுக்கப்பட்டு ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி மேற்பாா்வையில் ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆம்பூா் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்து லாரியில் அனுப்பப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் வைத்து பூட்டி அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட 300 வாக்குச் சாவடிகளுக்கு 300 வாக்குப் பதிவு இயந்திரங்கள், இருப்பு 60 இயந்திரங்கள் உள்பட மொத்தம் 360 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 300 விவிபேட் கருவிகள், இருப்பு 90 கருவிகள் உள்பட மொத்தம் 390 விவி பேட் கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டதை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.