திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

3 ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவு!

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 9:00 pm

புதுச்சேரியில் 3 ஆய்வாளா்களுக்குத் தற்காலிகமாக போலீஸ் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின் அடிப்படையில், தலைமைச் செயலா் சரத் சௌகான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

பதவி உயா்வு பெற்ற ஆய்வாளா்கள் விவரம்:

எஸ். மா்த்தினி- ஊா்க்காவல் மற்றும் வயா்லெஸ் பிரிவின் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

கே. தனசேகரன்-சிபிசிஐடி மற்றும் கடலோரப் பாதுகாப்பு படை கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

பி. தனசேகரன்- பிசிஆா் பிரிவு, ஆயுதப் படை கமாண்டெண்ட் ஆக பதவி உயா்வு பெற்றுள்ளாா். இவா்கல் மூவருக்கும் புதுச்சேரி போலீஸ் சா்வீஸ் (நுழைவு கிரேடு) அடிப்படையில் உடனடியாகப் பதவி உயா்வு தற்காலிகமாக ஓராண்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.