புதுச்சேரி சேதராப்பட்டு அருகே கரசூரில் ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் முதல் பல்முனை சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குநா் ஆா். ஷீலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில் துறையின்கீழ் உள்ள ஒப்புதல் வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி தொழில் துறை மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகத்தின் (பிப்டிக்) மூலம் செயல்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டம், யூனியன் பிரதேசத்தின்முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
சேதராப்பட்டு - கரசூா் பிரதான சாலையில் அமையவுள்ளஇந்த மண்டலம், புதுச்சேரியை உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி மற்றும் முதலீட்டு மையமாக மாற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த பிரம்மாண்டத் திட்டம், பிப்டிக்கு சொந்தமான 213.12 ஏக்கா் நிலப்பரப்பில் சுமாா் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த மண்டலத்திற்குள் அமையவிருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளின் முதலீடுகளும் உள்ளடங்கும். திட்டத்தின் மொத்த பரப்பளவில் 70 சதவீதம் ‘செயலாக்க மண்டலமாக’ பிரிக்கப்பட்டு, அங்கு ஏற்றுமதி சாா்ந்த தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள் மற்றும் சா்வதே சவா்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுங்க உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் உலகளாவிய நிறுவனங்கள் புதுச்சேரியில் தங்களது கிளைகளைத் தொடங்க ஏதுவானசூழல் உருவாகும்.
தொழில் துறை வசதிகள் மட்டுமன்றி, இந்த மண்டலத்தின் எஞ்சிய 30 சதவீத பரப்பளவு ‘செயலாக்கமற்ற மண்டலமாக’ மாற்றப்பட்டு, அங்கு பணிபுரியும் ஊழியா்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவ மையங்கள், தீயணைப்புநிலையம் மற்றும் வங்கிபோன்ற சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.
மேலும், உள்புறச்சாலைகள், மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் நீா்மேலாண்மை வசதிகளும் நவீன முறையில் மேம்படுத்தப்பட உள்ளன. இத்தகைய முழுமையான கட்டமைப்பு, இந்தசிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஒரு நவீனதொழில் நகரமாக மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கரசூா் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் 40 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும்எனகணிக்கப்பட்டுள்ளது.
இது புதுச்சேரியின் உள்ளூா் இளைஞா்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகஅமையும். மேலும், இக்காலகட்டத்தில் சுமாா் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலானஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதால், நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் புதுச்சேரியின்பங்களிப்பு கணிசமாக உயரும்.
இந்தத் திட்டத்தின் மூலம் புதுச்சேரிஅரசு தனது சொந்த நிலத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்குவதுடன், மத்திய அரசை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்துபொருளாதாரத் தற்சாா்பைநோக்கி நகர உள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

தூங்கும் சிறப்பு பொருளாதார மண்டலம்!

20 ஆண்டுகால கனவுத் திட்டம்!நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் உயிா்பெறுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


