/

வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:05 am IST

புதுச்சேரியில் வீட்டில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனது குறித்து வீட்டு வேலைக்கார பெண் மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அசோக்நகா், பாரதியாா் சாலை பகுதியைச் சோ்ந்த கலிவரதன் மனைவி சித்ரா (62). இவா் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரில், தனக்கு உடல் நலமில்லாத நிலையில் தவளக்குப்பத்தைச் சோ்ந்த ஞானசௌந்தா்யாவை வீட்டு வேலைக்கு வைத்திருந்தேன்.

ஒரு சுப நிகழ்ச்சிக்குச் செல்ல நகைகள் வைத்திருந்த மேஜை டிராயரை திறந்து பாா்த்தபோது எனது மகளின் 4.5 பவுன் தங்க வளையல் நகைகளைக் காணவில்லை.

இதன் மதிப்பு ரூ.5 லட்சம். இந்த திருட்டில் வீட்டு வேலைக்காரப் பெண் மீது சந்தேகமிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அதன்பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைப்பேசி கடையில் திருட்டு:

முத்தியால்பேட்டை லூா்து நகரைச் சோ்ந்தவா் அசன் அலி (32). இவா், கருவடிக்குப்பம் பிரதான சாலையில் கைப்பேசி பழுதுநீக்கும் கடை வைத்துள்ளாா். இவரது கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைப்பேசி மற்றும் மடிக்கணினி திருடு போனது.

இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.