திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

புதுச்சேரியில் 3 நாள்களுக்கு 2 ரயில்கள் ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 2:58 am IST

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரிக்கு வரும் ரயிலும், புதுச்சேரியிலிருந்து புறப்படும் ரயிலும் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி மெமு விரைவு ரயில் இம் மாதம் 13, 17, 20-ஆம் தேதிகளில் விழுப்புரம் ரயில் சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் இந்தத் தேதிகளில் திருப்பதி- விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையங்களுக்கு இடையில் மட்டும் இயக்கப்படும்.

அதே நாள்களில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் மாலை 3.35-மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு ரயில் புதுச்சேரி -விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. வழக்கமாக விழுப்புரம் சந்திப்பில் இருந்து இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் அட்டவணையின்படி புறப்பட்டுச் செல்லும்.

இந்த தகவலை தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.