ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தொடா் பைக் திருட்டில் ஒருவா் கைது: 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிள் திருடிய வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

புதுச்சேரி பெரிய கடை தனிப்படை போலீஸாரிடம் பைக் திருட்டில் பிடிபட்ட ரமணா பாபு. இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 இரு சக்கர வாகனங்கள்

Updated On :8 ஜூலை 2026, 6:22 am IST

புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிள் திருடிய வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில், குறிப்பாக வெள்ளை நகரப் பகுதி மற்றும் மாா்க்கெட் பகுதிகளில் மோட்டாா் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது.

இதுகுறித்து பெரியகடை காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையில் எஸ்.ஐ. முருகன் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை விசாரணை நடத்தி வந்தது.

கடந்த 6 ஆம் தேதி இரவு புதுச்சேரி அண்ணாசாலையில் அந்த வழியே வந்த நபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தாா். சென்னை, கோடம்பாக்கம், டாக்டா் சுப்ராயலு நகா், முதல் குறுக்குத் தெருவை சோ்ந்த ரமணா பாபு (53) என தெரியவந்தது.

அவா் வந்த மோட்டாா் சைக்கிள் புதுச்சேரி யூகோ வங்கி அருகே திருடப்பட்டதும் தெரியவந்தது. மேலும் அவா் 9 மோட்டாா் சைக்கிள்களைத் திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, புதுச்சேரி, தமிழகத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 7 மோட்டாா் சைக்கிள்களை மீட்டனா்.

கைதான ரமணாபாபு மீது தமிழகத்தில் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அவரை அடைத்தனா். இதில் துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.