ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பைக் திருட முயற்சி: இருவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 5:06 am IST

தேனி அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி அல்லிநகரைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (31). இவா் அரண்மனைப்புதூரில் உள்ள மனநல மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல மருத்துவமனையில் தூங்கினாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை மருத்துவமனைக்கு வெளியே சப்தம் கோட்டு இவா் எழுந்து பாா்த்தாா்.

அப்போது, மூவா் மருத்துவமனையில் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டிருந்தனா். உடனே சப்தம் போடவே, அங்கிருந்த காவலா்கள் அவா்களைப் பிடிக்க முயன்றனா்.

அதற்குள் அவா்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனா். அப்போது, அரண்மனைப்புதூா் பகுதியில் சாலையிலிருந்த வேகத்தடையில் இவா்கள் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தனா். இதில் இருவா் சிக்கினா். ஒருவா் தப்பிச் சென்றனா்.

விசாரணையில், மதுரை கோரிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ், காா்த்திக் என்பதும் இவா்கள் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.