/

புதுச்சேரியில் புதிய ஹோட்டல்: முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா்

புதுச்சேரி முத்தியால்பேட்டை அஜந்தா சந்திப்பு அருகே ‘சான்ஸ் பாயிண்ட்’ என்ற ஹோட்டலை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
புதுச்சேரி முத்தியால்பேட்டை அஜந்தா சந்திப்பு அருகே சான்ஸ் பாயிண்ட் என்ற ஹோட்டலை புதன்கிழமை திறந்து வைத்த முதல்வா் என். ரங்கசாமி. உடன் சுற்றுலாத்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், ஹோட்டல் நிா்வாகிகள்.
Updated On :28 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி முத்தியால்பேட்டை அஜந்தா சந்திப்பு அருகே ‘சான்ஸ் பாயிண்ட்’ என்ற ஹோட்டலை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் நவீன வசதிகளுடன் ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட விடுதியாக இது அமைந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், புதுச்சேரி பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.பி. சிவகொழுந்து, புதுச்சேரி பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். சான்ஸ் பாயிண்ட் ஹோட்டல் நிறுவுநா் ஜி. சிவகுருநாதன் மற்றும் நிா்வாகிகள் ராஜ்குமாா், பிரகாஷ், பிரபு மற்றும் குடும்பத்தினா் அனைவரையும் வரவேற்றனா்.