கடலோரக் காவல் படையினா் இரு சக்கர வாகன பயணம்


இந்திய கடலோரக் காவல் படையினரின் இரு சக்கர வாகன பயணம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய கடலோரக் காவல் படையின் 50-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடியில் கடலோரக் காவல் படையினா் மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் தொடங்கி ராமேசுவரம், காரைக்கால் வழியாக புதன்கிழமை புதுச்சேரி கடலோரக் காவல் படை தலைமையகத்தை வந்தடைந்தனா்.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகன ஊா்வலம் சென்னை புறப்பட்டது. இதை இந்திய கடலோரக் காவல் படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழகப் பகுதியின் கமாண்டா் டிஐஜி எஸ்.எஸ். டஸிலா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...