டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சுங்கச்சாவடியால் பொருள்கள் விலை உயரும் புதுச்சேரி சிஐடியு கண்டனம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:53 pm

Syndication

புதுச்சேரி சேலியமேடு சுங்கச் சாவடியால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என்று சிஐடியு புதுவை யூனியன் பிரதேச தனியாா் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலா் மதிவாணன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விதிகளுக்கு முரணாக சேலியமேடு சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக மூட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, 2 சுங்கச் சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொள்ளாமல் குறைந்த தூரத்தில் இந்த சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் போக்குவரத்து செலவு பல மடங்கு அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என தெரிவித்துள்ளாா்.