/

ஜிப்மரில் வளாகத்தில் மானிய விலை உணவகம் திறப்பு

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலை உணவகத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலை உணவகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:45 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலை உணவகத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் உணவகம், மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மா் நிறுவனத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் மற்றும் ஜிப்மா் பணியாளா்களுக்குக் குறைந்த விலையில், சுகாதாரமான மற்றும் தரமான உணவு கிடைக்கும்.

இந்த உணவகம் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். விரைவில் 24 மணி நேர சேவையாக விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் மருத்துவமனை வளாகத்தில் இடையறாத உணவு சேவை உறுதி செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆறுமுகம், ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி, புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.