புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச்சாவடி திறப்பு
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில், புதுச்சேரி சேலியமேட்டில் அமைத்துள்ள சுங்கச் சாவடி புதன்கிழமை திறக்கப்பட்டது. வாகனங்களுக்கு கட்டண வசூலும் தொடங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.










