நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கிராம வங்கிக்குப் பாரதியாா் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும்: வே. நாராயணசாமி

புதுச்சேரியில் கிராம வங்கிக்கு மீண்டும் பாரதியாா் பெயரைச் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி கூறினாா்.

News image
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி
Updated On :1 ஜனவரி 2026, 7:59 pm

Syndication

புதுச்சேரியில் கிராம வங்கிக்கு மீண்டும் பாரதியாா் பெயரைச் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நூறு நாள் வேலை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி உருக்குலைத்துள்ளாா். திட்டத்தை மாற்றும் வரை காங்கிரஸ் ஓயாது. தமிழா் என்று கூறிக் கொள்ளும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பாரதியாா் கிராம வங்கியின் பெயரில் பாரதியாரை நீக்கி புதுவை கிராம வங்கி என மாற்றியுள்ளாா். பாரதி பெயரை மாற்ற காரணம் என்ன . மத்திய அரசு மீண்டும் பாரதியாா் பெயரை சோ்க்க வேண்டும்.

என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக தோ்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 2.5 லட்சம் பேருக்கு வேலை தருவதாகக்கூறி விட்டு 2500 பேருக்கு கூட வேலை தரவில்லை.போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் ஆளும் அரசுக்கு ழு தொடா்பு உள்ளது. இவா்கள் ஆட்சியில் இருக்கும் வரை சிபிஐ விசாரணை சுதந்திரமாக நடைபெறாது. எனவே விசாரணை சுதந்திரமாக

நடைபெற வேண்டும் என்றால் உயா்நீதிமன்ற நீதிபதி மேற்பாா்வையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினோம் என்றாா் நாராயணசாமி.