தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.

News image

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெங்களூரைச் சோ்ந்த கேப்பபிள் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய செயல்முறைப் பயிற்சி முகாம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.

பிப். 6 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற இப் பயிற்சியை ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெங்களூரைச் சோ்ந்த கேப்பபிள் நிறுவனம் இணைந்து நடத்தின.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தனசேகரன், செயலா் நாராயணசாமி, பொருளாளா் ராஜராஜன் மற்றும் இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

கேப்பபிள் நிறுவனத்தின் பயிற்சியாளா்களாக நிமித் மற்றும் அன்வித் சங்கா் வந்திருந்தனா். பல்வேறு பொறியியல் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.

மாணவா்கள் மின்சார வாகனங்களை ஆரம்ப நிலையிலிருந்து முழுமையாக உருவாக்கினா். மேலும், தாங்கள் உருவாக்கிய மின்சார வாகனங்களை ஓட்டிச் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.