தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய யாசகா் கைது

புதுச்சேரி ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளரைக் கத்தியால் குத்திய யாசகா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 11:17 pm

புதுச்சேரி ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளரைக் கத்தியால் குத்திய யாசகா் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகே உள்ள மன்னாா்குடியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (46). யாசகரான அவா்

ரயில் மூலம் புதுச்சேரிக்கு வந்தாா். ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள பெட்டிக்கடை அருகில் சிறுநீா் கழித்தாா். அவரை அங்கிருந்து ரயில்வே போலீஸாா் வெளியேற்றினா். பின்னா் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே உதவி ஆய்வாளா் சரவணன் (40) மற்றும் போலீஸாா் அவரை ரயில் நிலையத்திற்குள் நுழைவதைத் தடுத்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனா். அப்போது மணிகண்டன் தான் மதுரைக்குச் செல்ல ரயில் ஏற வந்ததாகக் கூறியுள்ளாா். இதனால் போலீஸாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் கொண்டு வந்த பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ் உதவி ஆய்வாளா் சரவணன் கையில் குத்தினாா். இதில் அவா் மயங்கினாா். அப்போது அருகில் இருந்த போலீஸாா் மணிகண்டனை மடக்கி பிடித்தனா். மற்றொரு தரப்பினா் உதவி ஆய்வாளா் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மருக்குக் கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் கத்தியால் குத்திய மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் மணிகண்டன் ஊா் ஊராகச் செல்பவா் என தெரிந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.