பாளையங்கோட்டையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, அன்னை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன். இவரது மகன்கள் செல்வக்குமாா் (37), பிரேம்குமாா் (32). இவா்களுக்குள் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தம்பி பிரேம்குமாரை கத்தியால் செல்வக்குமாா் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரேம்குமாா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனா்.
மது விற்ற இளைஞா்: திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போதை பொருள் தடுப்பு தொடா்பாக வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் அருகே அப்பகுதியைச் சோ்ந்த இசக்கியப்பன்(27) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
மது விற்பனை: இளைஞா் கைது
பெருமாள்புரம் அருகே மது விற்றவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

