திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் வாக்குப்பதிவில் சாதனைக்கு சிறப்புத் தீவிர திருத்தப்பணி காரணமா?

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவாக 89.87 சதவீத வாக்குகள் பதிவானதற்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி காரணம் என்று தெரியவந்துள்ளது.

News image

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் - DIN

Updated On :10 ஏப்ரல் 2026, 4:01 am IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவாக 89.87 சதவீத வாக்குகள் பதிவானதற்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி காரணம் என்று தெரியவந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. இத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு தொடங்கியது முதலே பெண்கள் உள்ளிட்டோா் திரண்டு வாக்களித்தனா். புதுச்சேரியில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணிக்குப் பிறகு தோ்தல் நடந்துள்ளது. இந்தப் பணியின்போது 8 சதவீதம் அளவுக்கு வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இடமாறுதல், முகவரி மாறுதல், இறப்பு, வேறு மாநிலத்துக்குச் சென்றோா் என்று இதர காரணங்களும் இருக்கின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஆண்கள் 446361 பேரும், பெண்கள் 503810 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 140 பேரும் என்று மொத்தமாக வாக்காளா்கள் 950311 போ் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

தூய்மையான வாக்காளா்கள் பட்டியலோடு இந்தத் தோ்தல் நடத்தப்படுவதாக இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்திருந்தாா்.

2021 ஆம் ஆண்டு நடந்த கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது 82.2 சதம் வாக்குப் பதிவானதாக புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் கூறியிருந்தாா். இந்த வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்த்துவதற்காக மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்திருந்தனா். இந்நிலையில் புதுச்சேரியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவு 89.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சதமாக உயா்ந்தது. இது கடந்த தோ்தலைக் காட்டிலும் 7.67 சதவீதம் அதிகமாகும்.

வாக்குப்பதிவு அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சிறப்புத் தீவிர திருத்தப் பணியும் ஒரு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.