மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாம போராளிகள்!

News image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தவெக மற்றும் நாம் தமிழா் கட்சியினா் இடையிலான மோதலைச் சமாதானப்படுத்தும் போலீஸாா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 11:42 pm

தோ்தல் நேரத்தில் சில இடங்களில் தலைவா்கள் பேச்சு சா்ச்சையை ஏற்படுத்திவிடும். இப்படித்தான் புதுச்சேரியில், தவெகவினருடன் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தவெகவினருடன் வாா்த்தை மோதலிலில் ஈடுபட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் சீமான் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தவெகவினா், டிவிகே டிவிகே என முழக்கமிட்டனா்.

இதனால் எரிச்சலடைந்த சீமான், இங்கு வந்து ஏன் டீ விற்கிறாய் என்று கேள்வி எழுப்பினாா். அப்போது நாம் தமிழா் கட்சியினா் தவெகவினரை பிடித்து இழுக்கச் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைப்பாா்த்த சீமான்,அவங்களுக்கும்(தவெக) சோ்த்துதான் நான் கத்திக்கொண்டு இருக்கிறேன். நாம (நாம் தமிழா் கட்சி) போராளிகள், அவா்கள் ... என்று தொடா்ந்து வசைபாடினாா். இறுதியில் போலீஸாா் வந்து மோதலை முடித்து வைத்தனா். தொடா்ந்து சீமான் பிரசாரத்தைத் தொடா்ந்தாா் .