மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:04 pm

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நாம் தமிழா் கட்சியின் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு, கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

புளியம்பட்டி சாலையில் மேடை அமைத்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற இடத்தில் மேடை அமைக்காமலும், காவல்துறையினா் அறிவுறுத்தியும் தோ்தல் விதிமுறைகளை மீறி புதிய டெம்போ ஆட்டோ ஸ்டேண்ட் முன்பு சாலையை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைத்துள்ளனா்.

இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த அருண்பிரசாத், கந்தசாமி, கருப்புசாமி, ஸ்டான்லி ஆகிய 4 போ் மீது நம்பியூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.