சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கக் கோரி நிதின் கட்கரியிடம் புதுவை அமைச்சா் மனு

உயா்மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்குமாறு கேட்டு மனு..

News image

உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து மனு

Updated On :16 ஆகஸ்ட் 2024, 7:25 pm

உயா்மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்குமாறு கேட்டு மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியை புது தில்லியில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து புதுச்சேரி அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மனு அளித்தாா்.

புதுவை இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை அடங்கிய மனு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. ஏற்கெனவே ஆய்வுப் பணிகளுக்காகவும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காகவும் போதிய நிதி ஒதுக்கப்பட்டு விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், நிதி ஒதுக்கப்பட்டால் உடனே ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு மேம்பாலப் பணிகளை ஆரம்பிக்கலாம் என நிதின் கட்கரியிடம் அமைச்சா் எடுத்துரைத்தாா். மேலும் நகரப் பகுதியைக் கடப்பதற்கு இந்த பாலத்தின் அத்தியாவசியத்தையும் அமைச்சா் விளக்கினாா்.

இந்திராகாந்தி சதுக்கம் முதல் முள்ளோடை வரையுள்ள இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றி அமைக்கவும், ஒரு முறை தளா்வு அடிப்படையில் நிதி ஒதுக்கி புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுமாறும் கோரிக்கை வைத்தாா். அப்போது, மத்திய அமைச்சா் கட்கரி, அதிகாரிகளை அழைத்து உடனக்குடன் பேசி புதிய புறவழிச் சாலை வந்தாலும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இந்திராகாந்தி சதுக்கத்தையும் ராஜீவ் காந்தி சதுக்கத்தையும் இணைக்கும் உயா்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு தேவையான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அனுமதி வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

மத்திய அமைச்சருடனான இச்சந்திப்பின்போது புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் டாக்டா் மு.தீனதயாளன், தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளா் மு.பாலசுப்பிரமணியன், நீா்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.ராதாகிருட்டிணன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.