மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்கவுள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:38 pm

முதல்வா் மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 6-ஆம் கட்ட பிரசாரம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கவுள்ளது.

ஆண்டிப்பட்டியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூா் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆத்தூா், நிலக்கோட்டை வேடசந்தூா் ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

தொடா்ந்து, ஏப்.18- ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம்,

உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம், உதகை, கூடலூா், குன்னூா், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்துப் பேசுகிறாா்.

ஏப்.19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒசூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், ஒசூா், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஹள்ளி, தளி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.