திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல விழா கொடியேற்றம்

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :7 மே 2026, 6:02 am IST

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, இரவு சுமாா் 6.30 மணிக்கு மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி திருவிழா கொடியை ஏற்றினாா். அதைத் தொடா்ந்து சமாதானத்தின் அடையாளமாக புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

ஆயா் தலைமையில் அருள்தந்தையா்கள் காந்தி சவரிமுத்து, ஜஸ்டின் திரவியம், மைக்கிள் ஜாா்ஜ், மரிய ஜோமிக்ஸ் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றினா். பங்கேற்ற அனைவருக்கும் அசனம் வழங்கப்பட்டது.

விழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறும் . தமிழ் மாத கடைசி நாளான சனிக்கிழமை (மே 9) காலை 11 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறும் .

மே 13 ஆம் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறாா். மதுரை புதிய எலிஸ் நகா் பங்குத்தந்தை அந்தோணி பாக்கியம் மறையுரை வழங்குகிறாா்.

14 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மதுரை உயா் மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்பு சாமி, தென்காசி வட்டார அதிபா் அந்தோணிசாமி ஆகியோா் தலைமையில் தேரடி திருப்பலி நடைபெறும். தோ் பவனி, காலை 8 மணி, 11.30 மணி, மாலை 7 மணி ஆகிய நேரங்களில் திருப்பலி நடைபெறுகின்றன. 15 ஆம் தேதி கொடியிறக்கம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.