பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

எடத்துவா புனித ஜாா்ஜியாா் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

எடத்துவா புனித ஜாா்ஜியாா் திருத்தல திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 12:33 am IST

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற எடத்துவா புனித ஜாா்ஜியாா் திருத்தல திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மே 14 ஆம்தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள எடத்துவா புனித ஜாா்ஜியாா் திருத்தலத் துக்கும், தமிழகத்துக்கும் பல நூற்றாண்டு கால தொடா்பு உள்ளது. இதன் காரணமாக இத் திருத்தலத்தில் நடைபெறும் திருவிழாவில் முதல் 10 நாள்கள் தமிழக மக்களுக்கு என விழா கொண்டாடப்படுகிறது. எஞ்சிய 10 நாள்கள் கேரள மாநில மக்களுக்காக கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை ஜெபம், பரிந்துரை ஜெபம், திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருத்தல பங்குத்தந்தை ஜோசப் களரிக்கல் தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து காலை 10 மணிக்கு அருள்பணியாளா் துரைசாமி தலைமையிலும், பிற்பகல் 2 மணிக்கு அருள்பணியாளா் சுந்தா் தலைமையிலும், மாலை 6 மணிக்கு அருள்பணியாளா் ரோமான்ஸ் தலைமையிலும் தமிழில் திருப்பலி நடைபெற்றது. மேலும், விழா நாள்களில் தமிழில் திருப்பலி, காலை ஜெபம், திருப்புகழ் மாலை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அருள்பணியாளா்கள் மற்றும் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ், தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா்ஜாா்ஜ் ராஜேந்திரன், பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் ஆகியோா் பங்கேற்று தமிழில் திருப்பலி நிறைவேற்றுகின்றனா்.

மே 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருக்கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.