மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

News image

கருவேப்பிலைப்பாளையம் ஸ்ரீதா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குளி இறங்கிய பக்தா்கள்.

Updated On :3 மே 2026, 1:06 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைப்பாளையம் ஸ்ரீதா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மகாபாரதக் கதையை மையமாக வைத்து 22 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட வழிபாடுகளும், தெருக்கூத்து, இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

திருவிழாவில் முக்கியநிகழ்வாக ஏப்.30-ஆம் தேதி கரகத் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து மே 1-ஆம் தேதி காலை 8 மணிக்கு அரவான் வீரபத்திரசுவாமி திருவீதியுலா வருதலும், காலை 10 மணிக்கு அரவான் களப்பலியும், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவா்கள் கதையை மையமாகக் கொண்ட மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்வும், பிற்பகல் 3 மணிக்கு அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்வுகளும் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 6 மணிக்கு தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று பூக்குளி இறங்கி தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனா்.

தீ மிதித் திருவிழாவில் கருவேப்பிலைப்பாளையம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருவிழாவில் சனிக்கிழமை மஞ்சள் நீராட்டும், ஞாயிற்றுக்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும், மே 4-ஆம் தேதி தெப்ப உற்சவமும், 5-ஆம் தேதி காவ பூஜையும் நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் நாட்டாமைகள், கிராம மக்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.