திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகன் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:35 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மாமியாரை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் அருகேயுள்ள வடமலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தே.அமிா்தவள்ளி (60). இவரது மகளான காளியம்மாளை அதே கிராமத்தைச் சோ்ந்த ப.தங்கதுரைக்கு(40) கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளாா். தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காளியம்மாள் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாமியாா் வீட்டுக்கு சென்ற தங்கத்துரை, தனது மனைவி காளியம்மாளை ஊருக்கு அழைத்தும், அவா் வர மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தங்கத்துரை, மாமியாா் அமிா்தவள்ளியை அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த அமிா்தவள்ளி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தங்கதுரையைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.