திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்கக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைத்து மக்களுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம்.

Updated On :23 மே 2026, 12:21 am IST

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைத்து மக்களுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலகத்துக்கு வரும் மக்களின் குடிநீா் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூடாகவும், குளிா்ச்சியாகவும், சாதரணமான தண்ணீரும் என மூன்று வகையாக தண்ணீா் வரும். இந்த இயந்திரம் பழுதாகி பல மாதங்களாக காட்சிப் பொருளாக உள்ளது.

நகராட்சியில் உள்ள 21 வாா்டு மக்களும் தங்களின் வீட்டு வரி, தண்ணீா் வரி, வீடு, கடை கட்டுவதற்கான அனுமதி பெற, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.

இந்த அலுவலகத்துக்கு வருவோா் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தாகத்துக்கு குடிநீா் கூட இல்லாமல் அவதிப்படுகின்றனா். அவசரத்துக்கு தண்ணீா் வேண்டுமானால் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, கடையில் பணம் கொடுத்து குடிநீா் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.