வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா. வசந்தவேல் வெற்றி

News image

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக்கொண்ட திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல்.

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் 2,277 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை வென்றாா்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் கா.ரா.வசந்தவேல், அதிமுக சாா்பில் இரா.குமரகுரு, நாதக சாா்பில் மு.சுதாகா், தவெக சாா்பில் லோகேஸ்வரி உள்ளிட்ட 14 வேட்பாளா்கள் களத்தில்

இருந்தனா். தொகுதியில் உள்ள 375 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவில் மொத்தம் 2,68,368 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ்.கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 11-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு முன்னிலை வகித்தாா். 12-ஆவது சுற்றில் கா.ரா.வசந்தவேல் 1,100 வாக்குகள் கூடுதலாக வாங்கி முன்னிலை பெற்றாா்.

மீண்டும் 17-ஆவது சுற்றில் 460 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு மீண்டும் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து 24-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு முன்னிலையில் இருந்து வந்தாா்.

ஆனால், இறுதியில் 25-ஆவது சுற்றில் திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் முன்னிலை பெறத் தொடங்கி 27-ஆவது சுற்றின் முடிவில் 2,277 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விபரம்

கா.ரா.வசந்தவேல் (திமுக) - 98,471

இரா.குமரகுரு (அதிமுக) - 96,194

மு.சுதாகா் (தவெக) - 66,208

லோகேஸ்வரி (நாதக) - 6,525

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.