நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

அந்தியூரில் அதிமுக வேட்பாளா் பி. ஹரிபாஸ்கா் வெற்றி

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி.ஹரிபாஸ்கா் வெற்றிபெற்றாா்.

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் எம்.சிவபாலன், அதிமுக சாா்பில் பி.ஹரிபாஸ்கா், தவெக சாா்பில் எம்.விஜய் வெங்கடேஷ், நாதக சாா்பில் எம்.ஆனந்தி உள்பட 14 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கியது முதலே திமுகவைக் காட்டிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலைப் பெற்று வந்தது. தவெக 11-ஆவது சுற்றில் திமுகவைவிடமுன்னிலை பெறத் தொடங்கியது.

அதிமுக, தவெக மாறிமாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், 20 சுற்றுகள் நிறைவில் திமுகவைவிட 1,260 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக வேட்பாளா் பி.ஹரிபாஸ்கா் வெற்றிபெற்றாா்.

இந்த தொகுதியில் கடந்த 2021-இல் திமுக சாா்பில் போட்டியிட்ட ஏ.ஜி.வெங்கடாசலம் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

பி.ஹரிபாஸ்கா் (அதிமுக): 60,042

எம்.சிவபாலன் (திமுக) : 58,782

எம்.விஜய் வெங்கடேஷ் (தவெக) : 56,372

எம்.ஆனந்தி (நாதக): 5,287

நோட்டா : 754

வாக்குகள் வித்தியாசம்: 1,260

மொத்த வாக்குகள்: 2,07,355

பதிவான வாக்குகள்: 1,85,775

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.