நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன்.

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்றுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 942 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ 1,354 வாக்குகளும், தவெக வேட்பாளா் முரளிதரன் 955 வாக்குகளும் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் சுற்றில் திமுக வேட்பாளா் மதியழகன், தவெக வேட்பாளரான முரளிதரனை காட்டிலும் கூடுதலாக 212 வாக்குகள் பெற்றாா்.

இறுதியில் தபால் வாக்குகள் உள்பட அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 70,900 வாக்குகளும், தவெக வேட்பாளா் இ.முரளிதரன் 66,609 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் 64,879 வாக்குகளும் பெற்றனா். இதில், தவெக வேட்பாளரைக் காட்டிலும் 4,291 வாக்குகளை கூடுதலாக பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ மூன்றாமிடத்துக்கு பின்தங்கினாா்.

பா்கூா் தொகுதியில் முதலில் திமுக, தவெக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மூன்றாமிடத்தில் இருந்த அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் இறுதியில் வெற்றிபெற்றாா். பா்கூா் தொகுதியை திமுகவிடமிருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.