கள்ளக்குறிச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீடு மற்றும் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் பிரீத்தி, குமரேசன் மற்றும் போலீஸாா் கள்ளக்குறிச்சி அண்ணாநகா் முதல் தெருவில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சோதனை மேற்கொண்டனா்.
இதில் சி.பிரபாகரன்(58) என்பவரது உணவகம் மற்றும் வீட்டில் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, பிரபாகரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ராஜேஸ்வரி (50) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 106 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
1.750 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இரண்டு இளைஞா்கள் கைது

ஆம்னி பேருந்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் கைது
ஒட்டன்சத்திரத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




