எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது

கள்ளக்குறிச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீடு மற்றும் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கள்ளக்குறித்தி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன், கைது செய்யப்பட்ட பிரபாகரன், ராஜேஸ்வரி

Updated On :8 ஜூலை 2026, 6:23 am IST

கள்ளக்குறிச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீடு மற்றும் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் பிரீத்தி, குமரேசன் மற்றும் போலீஸாா் கள்ளக்குறிச்சி அண்ணாநகா் முதல் தெருவில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சோதனை மேற்கொண்டனா்.

இதில் சி.பிரபாகரன்(58) என்பவரது உணவகம் மற்றும் வீட்டில் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, பிரபாகரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ராஜேஸ்வரி (50) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 106 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.