டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

மின் கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரம் எடுக்கும் போது, மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் எ.ரமேஷ் (42). இவரது விளை நிலப் பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளாராம். அந்த வீட்டுக்கு இரவு நேரங்களில் விளை நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்தாராம்.

சனிக்கிழமை இரவு கொக்கி போட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் ரமேஷின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.