/

மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மின் சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டியை அடுத்த சக்கம்பட்டியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (42). இவா் தனது வீட்டின் அருகே உணவகம் நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை நாரணயசாமி வீட்டில் மின் சுவிட்சை போட்ட போது மின் கசிவு ஏற்பட்டு அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.