நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சங்கராபுரம் அருகேயுள்ள எஸ்.வி.பாளையத்தில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்த போது, தவறி கீழே விழுந்த முதியவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:46 pm

Syndication

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகேயுள்ள எஸ்.வி.பாளையத்தில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்த போது, தவறி கீழே விழுந்த முதியவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்நதவா் பெரியசாமி (67). இவா் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது தவறி கீழே விழுந்ததில் பெரியசாமி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனராம். அங்கு பெரியசாமியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.